சனி தோஷங்களில் இருந்து விலகி இருப்பதற்கான சில பரிகார முறைகள்

 தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.


கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். 

வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வழிபடவும்.

சனிக்கிழமை அசைவ உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. 

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணையில் குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகிவிடும்.

பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்...

No comments

Theme images by sandsun. Powered by Blogger.