ஸ்படிக மாலையினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவு


அழகு, தெய்வப்பிரியம், ஆத்தும தரிசனம், ஆரோக்கிய இரட்சை, ஸதானக் குறிப்பு, தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம்.


பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும், 
காதிலும், மூக்கிலும், உதட்டிலும், கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், 
கையிலும், மார்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால் விரலிலும்,
 கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு.

தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும்
நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் 
சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் 
கார்த்திகை. ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து, 
ஸ்படிக மாலையை தண்ணீர், பால் என்பவற்றில் கழுவி 
குருவின் உதவியால் அணிய வேண்டும்என்பது ஆசாரவிதி.

எந்த காலமானாலும் வெப்பத்தை தடைசெய்யும் சக்தி 
இம்மாலைக்குண்டு.கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் 
கட்டுபடுத்த இம்மாலைக்கு இயலும். இரவுவேளை 
இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து,  
மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும்
 என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் 
உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து 
தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன.

தீய சக்திகளிலிருத்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், 
தொழில் ரீதியான வளர்ச்சிக்கும் இந்த மாலையை பயன்படுத்தலாம்

No comments

Theme images by sandsun. Powered by Blogger.