சுவையான இராசவள்ளிக் கிழங்கு கூழ்

தேவையான பொருட்கள்:- 

இராசவள்ளிக் கிழங்கு - 1 சிறிது

தேங்காய்ப் பால் - 1 கப் (முதற்பால்)

சீனி - 3 மே.கரண்டி

உப்பு - தேவையான அளவு 


செய்முறை:-

கிழங்கை தோல் சீவி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவவும்.

3 1/2 கப் தண்ணீரில் கிழங்கை போட்டு நன்றாக அவிய விடவும் 

தண்ணீர் பாதியாக  வற்றியதும், பாலை விடவும்.

பால் கொதித்ததும் சீனியைசேர்த்து , தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ஓரளவு இறுகியவுடன் இறக்கி மசிக்கவும்.. அத்துடன் சுவையான இராசவள்ளிக் கிழங்கு கூழ் ரெடி..... 


சூட்டுடன் பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.

No comments

Theme images by sandsun. Powered by Blogger.